என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எனது மகன் மீதான அன்பால் சி.பி.ஐ. சோதனை: டி.கே.சிவக்குமாரின் தாய் பேட்டி
Byமாலை மலர்6 Oct 2020 1:57 AM GMT (Updated: 6 Oct 2020 1:57 AM GMT)
எனது மகன் மீதான அன்பால் வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பதாக டி.கே.சிவக்குமாரின் தாய் கூறியுள்ளார்.
பெங்களூரு :
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக கூறி காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீடு, அலுவலகங்களில் நேற்று சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது. ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா தொட்டஆலதஹள்ளியில் உள்ள டி.கே.சிவக்குமார் வீட்டிலும் சோதனை நடந்திருந்தது. அங்கு டி.கே.சிவக்குமாரின் தாய் கவுரம்மா வசிக்கிறார்.
இந்த சோதனை குறித்து கவுரம்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
எனது மகன் வீட்டில் எதற்காக அடிக்கடி சோதனை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய வயிறு எரிகிறது. சி.பி.ஐ., அமலாக்கத்துறைக்கு எனது மகன் மீது அன்பு அதிகம் என்று நினைக்கிறேன். அதனால் தான் அடிக்கடி வந்து அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்துகிறார்கள்.
வீட்டு பீரோவை உடைத்து உள்ளே இருப்பதை எடுத்து செல்லட்டும். என்னையும், எனது மகனையும் சி.பி.ஐ. அழைத்து செல்லட்டும். எங்களுக்கு நேரத்திற்கு சாப்பாடு கொடுத்தால் போதும். எனது வீட்டில் நடந்த சோதனையில் எந்த ஆவணமும் சிக்கவில்லை. விசாரணைக்கு வரும்படி கூறி எனக்கு எந்த விதமான நோட்டீசும் வழங்கவில்லை. எனது மகன் வீட்டில் தொடர்ந்து சோதனை நடத்துவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக கூறி காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீடு, அலுவலகங்களில் நேற்று சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது. ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா தொட்டஆலதஹள்ளியில் உள்ள டி.கே.சிவக்குமார் வீட்டிலும் சோதனை நடந்திருந்தது. அங்கு டி.கே.சிவக்குமாரின் தாய் கவுரம்மா வசிக்கிறார்.
இந்த சோதனை குறித்து கவுரம்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
எனது மகன் வீட்டில் எதற்காக அடிக்கடி சோதனை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய வயிறு எரிகிறது. சி.பி.ஐ., அமலாக்கத்துறைக்கு எனது மகன் மீது அன்பு அதிகம் என்று நினைக்கிறேன். அதனால் தான் அடிக்கடி வந்து அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்துகிறார்கள்.
வீட்டு பீரோவை உடைத்து உள்ளே இருப்பதை எடுத்து செல்லட்டும். என்னையும், எனது மகனையும் சி.பி.ஐ. அழைத்து செல்லட்டும். எங்களுக்கு நேரத்திற்கு சாப்பாடு கொடுத்தால் போதும். எனது வீட்டில் நடந்த சோதனையில் எந்த ஆவணமும் சிக்கவில்லை. விசாரணைக்கு வரும்படி கூறி எனக்கு எந்த விதமான நோட்டீசும் வழங்கவில்லை. எனது மகன் வீட்டில் தொடர்ந்து சோதனை நடத்துவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X