search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெஞ்சமின் நேட்டன்யாகூ, பிரதமர் மோடி
    X
    பெஞ்சமின் நேட்டன்யாகூ, பிரதமர் மோடி

    இஸ்ரேல் பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு

    பிரதமர் மோடி நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகூவுடன் தொலைபேசியில் பேசினார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகூவுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது இரு தலைவர்களும் இரு நாடுகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தனர்.

    குறிப்பாக வேளாண்மை, தண்ணீர் மற்றும் புத்தாக்க திட்டங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும் கொரோனாவுக்கு எதிரான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் பேசினர்.

    இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில், ‘எனது நண்பரான இஸ்ரேல் பிரதமர் நேட்டன்யாகூவுடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது கொரோனாவுக்கு எதிரான இந்தியா-இஸ்ரேல் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து பேசினோம். மேலும் இரு நாட்டு திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்தோம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
    Next Story
    ×