என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப் மாநிலத்தை தவிர வேறு எங்கும் போராட்டம் நடக்கவில்லை -பிரகாஷ் ஜவடேகர்
Byமாலை மலர்4 Oct 2020 6:34 AM GMT (Updated: 4 Oct 2020 6:34 AM GMT)
பஞ்சாப் மாநிலத்தை தவிர வேறு எங்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெறவில்லை என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
பனாஜி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுபற்றி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது:-
பிரதமர் மோடிக்கு தேசத்தைப் பற்றி ஒரு பெரிய சிந்தனை இருக்கிறது. ஜிஎஸ்டி காரணமாக நாம் ஒரு நாடு, ஒரு வரியை பெற்றோம். அதேபோல், வேளாண் மசோதாக்கள் மூலம் ஒரு நாடு, ஒரு சந்தையை பெறுவோம். தேசிய தேர்வானது நமக்கு ஒரு தேசம், ஒரு தேர்வை வழங்குகிறது. இதேபோல் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டை அறிவித்திருக்கிறோம்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தை தவிர வேறு எங்கு போராட்டம் நடக்கிறது? பஞ்சாப் மாநிலத்தில்கூட காங்கிரஸ் ஆட்சி என்பதால்தான் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. அங்கும் காங்கிரஸ் ஆட்சி இல்லையென்றால் போராட்டம் நடக்காது. உண்மையில், வேளாண் சட்டங்களை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X