என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அடல் சுரங்கப்பாதை எல்லை உள்கட்டமைப்பை பலப்படுத்தும் - ஜே.பி. நட்டா பெருமிதம்
Byமாலை மலர்4 Oct 2020 1:23 AM GMT (Updated: 4 Oct 2020 1:23 AM GMT)
அடல் சுரங்கப்பாதை எல்லை உள்கட்டமைப்பை பலப்படுத்தும் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இமாசலப்பிரதேச மாநிலத்தில் மணாலி-லே இடையே அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இது குறித்து பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, “மூலோபய முக்கியத்துவம் வாய்ந்த அடல் சுரங்கப்பாதை இணைப்பை மட்டுமல்ல நமது எல்லை உள்கட்டமைப்பையும் பலப்படுத்தும். உலகத் தரம் வாய்ந்த எல்லை இணைப்புக்கு இது ஒரு வாழும் உதாரணமாகும்” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்ததால் முழு நாட்டுக்கும் குறிப்பாக இமாசலப்பிரதேசத்தின் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறிய ஜே.பி. நட்டா, 2014-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை விரைவாக நிறைவேற்றியதற்காகவும், மாநில மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியதற்காகவும் அவர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X