என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அக்டோபர் 16 முதல் மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடக்கம் - நிதி அமைச்சகம்
Byமாலை மலர்3 Oct 2020 7:32 PM GMT (Updated: 3 Oct 2020 7:32 PM GMT)
அக்டோபர் 16 முதல் மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியில் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அக்டோபர் 16 முதல் மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2021- 2022ம் ஆண்டு பட்ஜெட் தயாரிப்பதற்காக வரும் 16-ம் தேதி முதல் அதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கவிருக்கிறது என குறிப்பிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவை ஈடுகட்டும் வகையில், பட்ஜெட் தயாரிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் மத்திய அரசின் நிதி செயலாளர்கள், செலவுச் செயலாளர்கள் மற்றும் நிதி ஆலோசகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
நவம்பர் முதல் வாரம் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டங்களில், மத்திய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X