என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்தில் மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட பரிசீலனை
Byமாலை மலர்2 Oct 2020 11:38 PM GMT (Updated: 2 Oct 2020 11:38 PM GMT)
மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடும் பரிந்துரையை இங்கிலாந்து அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
புதுடெல்லி:
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கியமானவர் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி. உலக அளவிலும் மிகமுக்கிய தலைவராக அறியப்படும் மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் அவரின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக இங்கிலாந்து அண்மையில் தெரிவித்திருந்தது.
அந்த நாட்டின் நிதி மந்திரி ரிஷி சுனக், ராயல் மின்ட் ஆலோசனை குழுவிடம் (ஆர்.எம்.ஏ.சி) இங்கிலாந்தில் சிறுபான்மையினராக உள்ள மக்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடும் பரிந்துரையை இங்கிலாந்து அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் இது குறித்து கூறுகையில் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி உலகுக்கு சமத்துவம் மற்றும் மனித நேயத்தின் சின்னமாக திகழ்கிறார். அவரது உலகளாவிய பங்களிப்புக்கு அங்கீகாரம் வழங்க இங்கிலாந்தின் நாணய திட்டத்தை விட வேறு எதுவும் பெரிதாக இருக்காது” என்றார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கியமானவர் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி. உலக அளவிலும் மிகமுக்கிய தலைவராக அறியப்படும் மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் அவரின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக இங்கிலாந்து அண்மையில் தெரிவித்திருந்தது.
அந்த நாட்டின் நிதி மந்திரி ரிஷி சுனக், ராயல் மின்ட் ஆலோசனை குழுவிடம் (ஆர்.எம்.ஏ.சி) இங்கிலாந்தில் சிறுபான்மையினராக உள்ள மக்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடும் பரிந்துரையை இங்கிலாந்து அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் இது குறித்து கூறுகையில் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி உலகுக்கு சமத்துவம் மற்றும் மனித நேயத்தின் சின்னமாக திகழ்கிறார். அவரது உலகளாவிய பங்களிப்புக்கு அங்கீகாரம் வழங்க இங்கிலாந்தின் நாணய திட்டத்தை விட வேறு எதுவும் பெரிதாக இருக்காது” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X