என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹத்ராசில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணுக்காக பிரியங்கா பிரார்த்தனை
Byமாலை மலர்2 Oct 2020 9:18 PM GMT (Updated: 2 Oct 2020 9:18 PM GMT)
ஹத்ராசில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண்ணுக்காக நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்து கொண்டார்.
ஹத்ராசில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண்ணுக்காக டெல்லி பிராச்சின் பகவான் வால்மீகி கோவிலில் நேற்று பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்து கொண்டார்.
ஹத்ராசில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண்ணுக்காக டெல்லி பிராச்சின் பகவான் வால்மீகி கோவிலில் நேற்று பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்து கொண்டார்.
இதில் அவர் பேசும்போது, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்துக்கு மாநில அரசு எந்த உதவியும் செய்யவில்லை எனவும், ஆனால் அந்த குடும்பத்துக்காகவும், அவர்களின் சமூகத்துக்காகவும் தான் இருப்பேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த குற்றத்தின் கொடூரத்தை அரசுகள் உணர்ந்து கொள்ளும்வரை இந்த விவகாரத்தை எழுப்புமாறு மக்களையும் அவர் கேட்டுக்கொண்டார். கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதிச்சடங்கை போலீசாரே நடத்தியதற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
தனது மகளின் இறுதிச்சடங்கில் பங்கேற்க தந்தையை அனுமதிக்காதது நமது கலாசாரத்தில் இல்லாதது எனவும் அவர் வருத்தத்துடன் கூறினார்.
ஹத்ராசில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண்ணுக்காக டெல்லி பிராச்சின் பகவான் வால்மீகி கோவிலில் நேற்று பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்து கொண்டார்.
இதில் அவர் பேசும்போது, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்துக்கு மாநில அரசு எந்த உதவியும் செய்யவில்லை எனவும், ஆனால் அந்த குடும்பத்துக்காகவும், அவர்களின் சமூகத்துக்காகவும் தான் இருப்பேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த குற்றத்தின் கொடூரத்தை அரசுகள் உணர்ந்து கொள்ளும்வரை இந்த விவகாரத்தை எழுப்புமாறு மக்களையும் அவர் கேட்டுக்கொண்டார். கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதிச்சடங்கை போலீசாரே நடத்தியதற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
தனது மகளின் இறுதிச்சடங்கில் பங்கேற்க தந்தையை அனுமதிக்காதது நமது கலாசாரத்தில் இல்லாதது எனவும் அவர் வருத்தத்துடன் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X