என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகள் வெற்றி பெறுவார்கள் - சோனியா காந்தி நம்பிக்கை
Byமாலை மலர்2 Oct 2020 6:50 PM GMT (Updated: 2 Oct 2020 6:50 PM GMT)
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகள் வெற்றி பெறுவார்கள் என்று சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று தனது வீடியோ உரையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்த கொரோனா காலத்திலும் விவசாயிகள், நாட்டுக்கு அசாதாரண சேவை செய்தனர். அவர்களால்தான் ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்க முடிகிறது. அத்தகைய விவசாயிகளுக்கு அநீதி இழைக்கும் வகையில், 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு் வந்துள்ளது.
தேசத்தந்தை மகாத்மா மற்றும் ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ கோஷத்தை அளித்த முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாளை நாம் கொண்டாடி கொண்டு இருக்கும்போது, விவசாயிகளும், தொழிலாளர்களும் மத்திய அரசின் 3 கருப்பு சட்டங்களுக்கு எதிராக தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்.
அவர்களை மோடி அரசு அழவைத்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கான அந்த சட்டங்களை விவசாயிகளிடம் கலந்தாலோசிக்காமல், மோடி அரசு கொண்டு வந்துள்ளது.
தன்னுடைய சில நண்பர்களிடம் மட்டும் ஆலோசித்து விட்டு கொண்டு வந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், மக்கள் ஒப்புதலுடன்தான் ஒவ்வொரு சட்டமும் கொண்டுவரப்பட்டது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் தொடர்ந்து போராடும். இந்த போராட்டத்தில் விவசாயிகள் வெற்றி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று தனது வீடியோ உரையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்த கொரோனா காலத்திலும் விவசாயிகள், நாட்டுக்கு அசாதாரண சேவை செய்தனர். அவர்களால்தான் ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்க முடிகிறது. அத்தகைய விவசாயிகளுக்கு அநீதி இழைக்கும் வகையில், 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு் வந்துள்ளது.
தேசத்தந்தை மகாத்மா மற்றும் ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ கோஷத்தை அளித்த முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாளை நாம் கொண்டாடி கொண்டு இருக்கும்போது, விவசாயிகளும், தொழிலாளர்களும் மத்திய அரசின் 3 கருப்பு சட்டங்களுக்கு எதிராக தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்.
அவர்களை மோடி அரசு அழவைத்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கான அந்த சட்டங்களை விவசாயிகளிடம் கலந்தாலோசிக்காமல், மோடி அரசு கொண்டு வந்துள்ளது.
தன்னுடைய சில நண்பர்களிடம் மட்டும் ஆலோசித்து விட்டு கொண்டு வந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், மக்கள் ஒப்புதலுடன்தான் ஒவ்வொரு சட்டமும் கொண்டுவரப்பட்டது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் தொடர்ந்து போராடும். இந்த போராட்டத்தில் விவசாயிகள் வெற்றி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X