search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுரங்கப்பாதையை பார்வையிடும் ராஜ்நாத் சிங்
    X
    சுரங்கப்பாதையை பார்வையிடும் ராஜ்நாத் சிங்

    அடல் சுரங்கப்பாதை நாளை திறப்பு - பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பார்வையிட்டார்

    இமாசல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை நாளை திறக்கப்படுவதையொட்டி, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று நேரில் பார்வையிட்டார்.
    சிம்லா:

    இமாசல பிரதேச மாநில பிரதேசத்தில் மணாலியில் இருந்து, லே நகருக்கு செல்லும் நெடுஞ்சாலையில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 9 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கம் உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, மிக நீளமான சுரங்கம் ஆகும். 10 ஆண்டுகள் கடும் உழைப்பில் இந்த சுரங்கம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதனால், மணாலியில் இருந்து லே செல்லும் தூரத்தில், 46 கி.மீ., குறைவதுடன், 4 மணி நேர, பயண நேரம் சேமிக்கப்படும்.

    ‘அடல்’ என, பெயரிடப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையில், ஒவ்வொரு, 60 மீட்டர் இடைவெளியில் தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு 250 மீட்டர் இடைவெளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு, 500 மீட்டர் தூரத்திலும், அவசர கால வெளியேறும் வழி அமைந்துள்ளது.

    இதற்கிடையே, இந்த சுரங்கப் பாதை திறப்பு விழாவிற்கு முழு தயார் நிலையில் உள்ளதாக எல்லை சாலை அமைப்பு தெரிவித்தது. உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று மணாலி சென்றார். அவரை இமாச்சல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் வரவேற்றார் அதன்பின், இமாசல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையை அம்மாநில முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூருடன் பார்வையிட்டார். மேலும் சுரங்கப்பாதை குறித்து முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் எடுத்துரைத்தார். 
    Next Story
    ×