search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலிபிரி நடைப்பாதை சீரமைப்பு பணி
    X
    அலிபிரி நடைப்பாதை சீரமைப்பு பணி

    திருப்பதி அலிபிரி நடைப்பாதை சீரமைப்பு பணி தொடங்கியது

    திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லக்கூடிய அலிபிரி மலைப்பாதை சீரமைக்கும் பணி தொடங்கியது.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப திருப்பதியில் இருந்து திருமலைக்கு அலிபிரி மலைப்பாதை வழியாக நடந்து செல்வது வழக்கம்.

    கொரோனா ஊரடங்கிற்கு முன் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பக்தர்கள் வரை அலிபிரி மலைப்பாதை வழியாக நடந்து சென்று வந்தனர். ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய டிக்கெட் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு நடைப்பாதை வழியாக சென்று வருகின்றனர்.

    அலிபிரி மலைப்பாதையில் வெயில் மற்றும் மழையில் பக்தர்கள் பாதிக்காத வகையில் அமைக்கப்பட்ட நிழற்கூரைகள் அமைத்து 20 ஆண்டுகள் ஆகிறது. தற்போது நிழற்கூரைகள் சேதமடைந்து மழை பெய்தால் தண்ணீர் கசிவு ஏற்படும் நிலையில் உள்ளது.

    இதனால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ.25 கோடியில் நிழல்கூரையை புனரமைக்க முடிவு செய்தது.

    இதையடுத்து, தற்போது அலிபிரி மலைப்பாதை புனரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. சேதமடைந்த நிழற்கூரைகள் இடிக்கும் பணி நடந்து வருகிறது. 6 மாதத்திற்குள் இந்த பணிகளை நிறைவு செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×