என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலக்கரி வெட்டி எடுக்க மத்திய, மாநில அரசுக்கு உரிமை இல்லை - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
Byமாலை மலர்1 Oct 2020 1:13 AM GMT (Updated: 1 Oct 2020 1:13 AM GMT)
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நிலக்கரி வெட்டி எடுக்க மத்திய, மாநில அரசுக்கு உரிமை இல்லை என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஜார்கண்ட் மாநிலத்தில், வர்த்தகரீதியாக நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு நிலக்கரி படுகைகளை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜார்கண்ட் மாநில அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:-
மேலேழுந்தவாரியாக பார்த்தால், நிலக்கரி படுகைகளை ஏலம் விட மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பதாக தோன்றும். ஆனால், அந்த பகுதி, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்ததா என்று கண்டறிய வேண்டும். அதற்காக நாங்கள் நிபுணர் குழுவை அனுப்பி வைப்போம்.அது சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்தால், மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்குமே நிலக்கரி வெட்டி எடுக்க உரிமை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜார்கண்ட் மாநிலத்தில், வர்த்தகரீதியாக நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு நிலக்கரி படுகைகளை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜார்கண்ட் மாநில அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:-
மேலேழுந்தவாரியாக பார்த்தால், நிலக்கரி படுகைகளை ஏலம் விட மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பதாக தோன்றும். ஆனால், அந்த பகுதி, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்ததா என்று கண்டறிய வேண்டும். அதற்காக நாங்கள் நிபுணர் குழுவை அனுப்பி வைப்போம்.அது சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்தால், மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்குமே நிலக்கரி வெட்டி எடுக்க உரிமை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X