என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி - சித்தராமையா அறிவிப்பு
Byமாலை மலர்1 Oct 2020 12:42 AM GMT (Updated: 1 Oct 2020 12:42 AM GMT)
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடப்போவதாக கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிரா, ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதையொட்டி அரசியல் கட்சிகள் இடைத் தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிரா மற்றும் ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 3-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் சிரா தொகுதியில் எங்கள் கட்சி சார்பில் முன்னாள் மந்திரி ஜெயச்சந்திரா போட்டியிடுவார். இந்த இடைத்தேர்தல் பொறுத்தவரையில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்.
ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக நாங்கள் கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்ற திட்டமிட்டு உள்ளோம். எங்கள் கட்சிக்கு பலம் உள்ளது. மேலும் எங்கள் கட்சியில் வேட்பாளர்களுக்கு பஞ்சமில்லை.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிரா, ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதையொட்டி அரசியல் கட்சிகள் இடைத் தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிரா மற்றும் ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 3-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் சிரா தொகுதியில் எங்கள் கட்சி சார்பில் முன்னாள் மந்திரி ஜெயச்சந்திரா போட்டியிடுவார். இந்த இடைத்தேர்தல் பொறுத்தவரையில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்.
ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக நாங்கள் கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்ற திட்டமிட்டு உள்ளோம். எங்கள் கட்சிக்கு பலம் உள்ளது. மேலும் எங்கள் கட்சியில் வேட்பாளர்களுக்கு பஞ்சமில்லை.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X