என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வெளிநாடுகளில் கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்க இந்தியா முடிவு
புதுடெல்லி:
சுய சார்பு எரிசக்தி பாதுகாப்பு என்ற தலைப்பில் மாநாடு டெல்லியில் நடந்தது. இதில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியதாவது:-
உலகில் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய்யை இறக்குமதியாளராக இந்தியா இருந்து வருகிறது. 80 சதவீதம் இறக்குமதி மூலமே நமது நாட்டில் கச்சா எண்ணெய் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் வெளிநாடுகளில் இருந்து 101.4 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யப்பட்டது.
இதில் 3-ல் 2 பங்கு கச்சா எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளான ஈராக், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து பெறப்பட்டது. மேலும் ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளில் தென் கிழக்கு ஆசிய நாடுகள் உள்பட 30 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யப்படுகிறது.
நீண்ட கால அடிப்படையில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய அமெரிக்கா, ரஷியா, அங்கோலா ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவசர தேவைவை பூர்த்தி செய்வதற்காக அமெரிக்காவிலும், வணிக ரீதியில் சாத்தியமான பிற வெளிநாடுகளிலும் கச்சா எண்ணெய்யை சேமித்து வைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மேலும் கத்தார் நாடு நமக்கு வழக்கமாக திரவ நிலையிலான எரிவாயு விநியோகம் செய்து வருகிறது. அத்துடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷியா ஆகிய நாடுகளிலிருந்தும் எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்