search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    டெல்லியில் மேலும் 3,227 பேருக்கு கொரோனா பாதிப்பு

    டெல்லியில் மேலும் 3,227 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா பாதிப்பு 2.76 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக சற்று குறைந்தே வருகிறது.
     
    இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 3,227  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,76,325 ஆக அதிகரித்துள்ளது.

    இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 48 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,320 ஆக உயர்ந்துள்ளது.

    டெல்லியில் இன்று 2,778 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,43,481 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 27,524 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×