search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவில் இயல்பை விட 9 சதவீதம் மழை பெய்துள்ளது - இந்திய வானிலை ஆய்வு மையம்

    இந்தியாவில் இயல்பை விட 9 சதவீதம் அதிகமான மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    புதுடில்லி:

    இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

    இந்தியாவின் பல மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதிகரிக்கும் கனமழையால் நாட்டின் முக்கிய நதிகள் , நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகளில் தண்ணீரின் அளவு உயர்ந்து கொண்டிருக்கிறது.

    மேற்கு ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்பின் பல்வேறு இடங்களில், பருவமழை விலகி செல்கிறது. பீஹாரின் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, அடுத்த 2 முதல் 3 நாட்களில், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டில்லி உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    தீபகற்ப இந்தியாவின் தெற்கு பகுதியில், அடுத்த 3 நாட்களில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். செப்.,29 அன்று ராயலசீமா, தெற்கு கர்நாடகா மற்றும் கேரளாவின் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    அடுத்த 5 நாட்களில் வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை அதிகமாக இருக்கும். அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு தீபகற்ப இந்தியா, மத்திய மற்றும் வடகிழக்கு இந்தியாவின் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். செப்.,27 வரை இந்தியாவில் 9 சதவீத மழைப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மழைப்பொழிவு இயல்பை விட 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×