என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
20 நாட்களே உள்ள நிலையில் மைசூரு தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
Byமாலை மலர்28 Sep 2020 3:13 AM GMT (Updated: 28 Sep 2020 3:13 AM GMT)
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி தொடங்கி, 26-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. தசரா விழா தொடங்க 20 நாட்களே இருப்பதால் தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மைசூரு :
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி தொடங்கி, 26-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. கொரோனாவால் இந்த ஆண்டு தசரா விழா எளிமையாக நடத்தப்படுகிறது. மேலும் ஜம்பு சவாரி ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரண்மனை வளாகத்திலேயே ஜம்பு சவாரி ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் தசரா விழா தொடங்க 20 நாட்களே இருப்பதால் தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதாவது மைசூரு நகரில் உள்ள பாரம்பரிய கட்டிடங்கள், முக்கிய தலைவர்களின் சிலைகள், சர்க்கிள்கள் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் மைசூரு அரண்மனையை சுத்தப்படுத்தும் பணியும் தொடங்கி நடந்து வருகிறது. அத்துடன் மைசூரு அரண்மனையை சுற்றிய சாலைகள், பஸ் நிலையம், விமான நிலையம், ரெயில் நிலைய ரோடுகள் உள்பட சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியும் நடந்து வருகிறது. அத்துடன் அரண்மனையில் வர்ணம் தீட்டும் பணியும் தொடங்கியுள்ளது. அதுபோல் பாரம்பரிய கட்டிடங்களையும் வர்ணம் தீட்டி புதுப்பொழிவாக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே வருகிற 1-ந்ே-தி தேதி தசரா ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் அபிமன்யு, விக்ரம், விஜயா உள்ளிட்ட 5 யானைகளும் நாகரஒலே முகாம்களில் இருந்து மைசூருக்கு அழைத்து வரப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளையும் வனத்துறையினர், தசரா கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி தொடங்கி, 26-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. கொரோனாவால் இந்த ஆண்டு தசரா விழா எளிமையாக நடத்தப்படுகிறது. மேலும் ஜம்பு சவாரி ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரண்மனை வளாகத்திலேயே ஜம்பு சவாரி ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் தசரா விழா தொடங்க 20 நாட்களே இருப்பதால் தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதாவது மைசூரு நகரில் உள்ள பாரம்பரிய கட்டிடங்கள், முக்கிய தலைவர்களின் சிலைகள், சர்க்கிள்கள் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் மைசூரு அரண்மனையை சுத்தப்படுத்தும் பணியும் தொடங்கி நடந்து வருகிறது. அத்துடன் மைசூரு அரண்மனையை சுற்றிய சாலைகள், பஸ் நிலையம், விமான நிலையம், ரெயில் நிலைய ரோடுகள் உள்பட சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியும் நடந்து வருகிறது. அத்துடன் அரண்மனையில் வர்ணம் தீட்டும் பணியும் தொடங்கியுள்ளது. அதுபோல் பாரம்பரிய கட்டிடங்களையும் வர்ணம் தீட்டி புதுப்பொழிவாக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே வருகிற 1-ந்ே-தி தேதி தசரா ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் அபிமன்யு, விக்ரம், விஜயா உள்ளிட்ட 5 யானைகளும் நாகரஒலே முகாம்களில் இருந்து மைசூருக்கு அழைத்து வரப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளையும் வனத்துறையினர், தசரா கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X