என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
11 நாட்களில் 10 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்... இந்தியாவில் கொரோனா மீட்பு எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது
Byமாலை மலர்28 Sep 2020 2:54 AM GMT (Updated: 28 Sep 2020 2:54 AM GMT)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்துள்ளது. அதேசமயம் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி உயிரிழப்பு 1.58 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 82.46 சதவீதமாகவும் இருந்தது.
தினசரி நோய்த்தொற்று உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 11 நாட்களில் மட்டும் 10 லட்சம் பேர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலக அளவில் நோய்த்தொற்று எண்ணிக்கையில் அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X