என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் - சுகாதாரத்துறை மந்திரி எச்சரிக்கை
Byமாலை மலர்27 Sep 2020 12:59 PM GMT (Updated: 27 Sep 2020 12:59 PM GMT)
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவனந்தபுரம்:
நாட்டிலேயே முதன் முதலாக கொரோனா தொற்று பதிவான கேரளா, துவக்கத்தில் மிகச்சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தொற்று பரவலை கணிசமாக கட்டுப்படுத்தியது.
ஆனால், கடந்த சில வாரங்களாக கேரளாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரமாக உள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சம் எட்டி வரும் நிலையில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சுகாதாரத்துறை மந்திரி கேகே ஷைலஜா கூறியதாவது:- “ கேரளாவில் கொரோனா 2-வது அலை தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புள்ளது. கொரோனா தொற்று பரவலை துவக்கத்தில் மாநில அரசு சிறப்பாக கட்டுப்படுத்திய போதும், சிலர் விதிகளை காற்றில் பறக்க விட்டதால் தொற்று பரவல் மோசமாகியுள்ளது.
முழு ஊரடங்கை தவிர்ப்பதற்கான எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. ஆனால், மக்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் பட்சத்தில், மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலைக்கு செல்ல வேண்டியிருக்கும்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X