என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பாதிப்பு- ஹரித்வார் அருகே தனிமைப்படுத்திக் கொண்ட உமா பாரதி
Byமாலை மலர்27 Sep 2020 7:34 AM GMT (Updated: 27 Sep 2020 7:34 AM GMT)
பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள் உள்ளிட்ட பொதுப்பணிகளில் இருப்பவர்களும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். அண்மையில் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் தற்போது பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான உமா பாரதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனக்கு கடந்த 3 நாட்களாக லேசான காய்ச்சல் இருந்ததாகவும், மருத்துவ பரிசோதனையில் தனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னைச் சார்ந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி உமா பாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் அருகே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், மீண்டும் நான்கு நாட்கள் கழித்து இன்னொரு முறை பரிசோதனை செய்து கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X