என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: விவசாயிகளுக்காக குரல் கொடுக்க ராகுல் காந்தி அழைப்பு
Byமாலை மலர்26 Sep 2020 11:00 PM GMT (Updated: 26 Sep 2020 11:00 PM GMT)
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த மசோதாக்களை எதிர்த்து, விவசாயிகளுக்காக குரல் கொடுக்குமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடெல்லி:
சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலனை சீரழிக்கும் என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்து வரும் மத்திய அரசு, விவசாயிகளின் நலனுக்காகவே இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு இருப்பதாக கூறி வருகிறது.
மேற்படி மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த மசோதாக்களை எதிர்த்து, விவசாயிகளுக்காக குரல் கொடுக்குமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ‘விவசாயிகளுக்காக பேசுங்கள்’ என்ற பிரசாரத்தை அவர் சமூக வலைத்தளங்களில் நேற்று தொடங்கி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘விவசாயிகள் மீது மோடி அரசு நடத்தி வரும் அட்டூழியங்கள் மற்றும் சுரண்டலை எதிர்த்து இணைந்து குரல் கொடுப்போம். விவசாயிகளுக்காக பேசுங்கள் என்ற இந்த பிரசாரத்தில், உங்கள் வீடியோ பதிவுடன் இணையுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அத்துடன், இந்த சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு இருந்தார்.
அதில், ‘மிகவும் ஜனநாயக விரோதமான முறையில் நமது விவசாயிகள் மீதான தாக்குதல் மற்றும் விவசாயத்தை அவர்களின் கார்பரேட் நண்பர்களுக்கு மாற்றும் முயற்சி’ என மேற்படி மசோதாக்கள் குறித்து காங்கிரஸ் கூறியிருந்தது.
சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலனை சீரழிக்கும் என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்து வரும் மத்திய அரசு, விவசாயிகளின் நலனுக்காகவே இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு இருப்பதாக கூறி வருகிறது.
மேற்படி மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த மசோதாக்களை எதிர்த்து, விவசாயிகளுக்காக குரல் கொடுக்குமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ‘விவசாயிகளுக்காக பேசுங்கள்’ என்ற பிரசாரத்தை அவர் சமூக வலைத்தளங்களில் நேற்று தொடங்கி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘விவசாயிகள் மீது மோடி அரசு நடத்தி வரும் அட்டூழியங்கள் மற்றும் சுரண்டலை எதிர்த்து இணைந்து குரல் கொடுப்போம். விவசாயிகளுக்காக பேசுங்கள் என்ற இந்த பிரசாரத்தில், உங்கள் வீடியோ பதிவுடன் இணையுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அத்துடன், இந்த சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு இருந்தார்.
அதில், ‘மிகவும் ஜனநாயக விரோதமான முறையில் நமது விவசாயிகள் மீதான தாக்குதல் மற்றும் விவசாயத்தை அவர்களின் கார்பரேட் நண்பர்களுக்கு மாற்றும் முயற்சி’ என மேற்படி மசோதாக்கள் குறித்து காங்கிரஸ் கூறியிருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X