என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு - தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை
Byமாலை மலர்26 Sep 2020 11:43 AM GMT (Updated: 26 Sep 2020 11:43 AM GMT)
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.
புதுடெல்லி:
பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய நாட்களில் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டு அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை அனைத்து தரப்பினரும் தயாராகி வருகின்றனர். தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ள நிலையில் பல கட்சிகள் தங்கள் கட்சிக்கு
புதிய நிர்வாகிகளை நியமிக்கும் வேலையில் இறங்கியுள்ளன.
இந்நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டு பாரதிய ஜனதா கட்சியும் தனது கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
இதில் சத்திஷ்கர் முன்னாள் முதல்மந்திரி ராமன் சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் மத்திய மந்திரி ராதா மோகன் சிங் உள்ளிட்டோர் பாஜக கட்சியின் துணைத்தலைவர்களாக
நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், பாஜக-வின் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் எச்.ராஜா உள்பட தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X