என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்
Byமாலை மலர்26 Sep 2020 10:05 AM GMT (Updated: 26 Sep 2020 10:05 AM GMT)
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று மதியம் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.5 ஆக பதிவான நில நடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பாரமுல்லா மாவட்டத்தின் குல்மர்க் பகுதியை மையமாகக்கொண்டு இன்று மதியம் 12.05 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாரமுல்லாவின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
சில நிமிடங்கள் நீடித்த இந்த நிலநடுக்கம் காரணமாக பாரமுல்லா பகுதியில் அமைந்துள்ள பல்வேறு கட்டிடங்கள் சற்று அதிர்ந்தன. இதனால் மக்கள் சற்று பதற்றம் அடைந்தனர்.
ஆனாலும், நிலநடுக்கத்தின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் கட்டிடங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X