search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆந்திராவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா - இன்று மேலும் 7,855 பேர் பாதிப்பு

    ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 7,885 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    ஆந்திரா:

    ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் ஆந்திர மாநில சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆந்திர மாநிலத்தில் இன்று 7,885 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,54,385 ஆக அதிகரித்துள்ளது. 

    இன்று ஒரே நாளில் 52 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,558 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று ஒரே நாளில் மட்டும் 8,807 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 69,353 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 5,79,667 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
    Next Story
    ×