என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூரத் ஓஎன்ஜிசி ஆலையில் தீ விபத்து- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தொழிலாளர்கள்
Byமாலை மலர்24 Sep 2020 4:18 AM GMT (Updated: 24 Sep 2020 4:18 AM GMT)
சூரத்தில் உள்ள ஓஎன்ஜிசி ஆலையில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சூரத்:
குஜராத் மாநிலம் சூரத்தில் ஓஎன்ஜிசி-க்கு சொந்தமான ஆலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆலையின் ஒரு பகுதியில் பற்றிய தீ, மளமளவெனப் பரவத் தொடங்கியதால் தொழிளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு சென்று கடுமையாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். அதேசமயம், எரிவாயு அழுத்தத்தை அதிகாரிகள் குறைத்தனர். இதன் மூலம் தீ உக்கிரமாக பரவுவது தடுக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.
விபத்து பற்றி மாவட்ட கலெக்டர் தவால் பட்டேல் கூறுகையில், ஓஎன்ஜிசி ஹசாரியா ஆலையில் அதிகாலை 3 மணியளவில் அடுத்தடுத்து மூன்று முறை குழாய்களில் அழுத்தம் காரணமாக வெடிப்பு ஏற்பட்டதாகவும், இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X