search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரன்தீப்சிங் சுர்ஜேவாலா
    X
    ரன்தீப்சிங் சுர்ஜேவாலா

    ரூ.666 கோடி அடுக்கு மாடி கட்டிட திட்டத்தில் ஊழல்: எடியூரப்பா மீது காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

    பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் ரூ.666 கோடி அடுக்குமாடி கட்டிட திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக எடியூரப்பா மீது கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    முதல்-மந்திரி எடியூரப்பா இதற்கு முன்பு காசோலை மூலம் லஞ்சம் வாங்கினார். இந்த முறை ஆர்.டி.ஜி.எஸ். மூலமாக லஞ்சம் பெற்றுள்ளார். வங்கி நடவடிக்கைகள் மூலமாகவே அவர் லஞ்சம் வாங்குகிறார் என்றால், அவருக்கு ஊழலில் எவ்வளவு ஆர்வம் உள்ளது என்பதை கவனிக்க முடியும். பெங்களூரு வளர்ச்சி ஆணைய கமிஷனர் தனக்கு லஞ்சம் கொடுக்கவில்லை என்பதற்காக அவரை பணி இடமாற்றம் செய்ததாக எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஆடியோ பதிவு ஒன்றில் கூறியுள்ளார். அவர் மீது பா.ஜனதா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?.

    பிரதமர் மோடி தான் செல்லும் இடங்களில் எல்லாம், நான் லஞ்சம் வாங்க மாட்டேன், மற்றவர்கள் லஞ்சம் வாங்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறுகிறார். ஆனால் லஞ்ச குற்றச்சாட்டில் முதல் இடத்தில் உள்ள விஜயேந்திராவுக்கு மோடி பா.ஜனதா துணைத்தலைவர் பதவியை வழங்கியுள்ளார். ஊழல் செய்தவர்களை எடியூரப்பா பாதுகாக்கிறார். இந்த விஷயத்தில் மோடி மவுனம் காக்கிறார். விஜயேந்திரா மீதான லஞ்ச குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெறும் வரை எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எடியூரப்பாவை மோடி நீக்க வேண்டும்.

    முதல்-மந்திரி எடியூரப்பா, அவரது மகன், பேரன் மற்றும் மருமகன் மீதான லஞ்ச புகார்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் ரூ.666 கோடி செலவில் அடுக்குமாடி கட்டிடம் கட்டும் திட்டத்தில் எடியூரப்பா குடும்பத்தினர் லஞ்சம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த லஞ்ச பணம் கொல்கத்தாவை சேர்ந்த 7 நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் முதல்-மந்திரி அலுவலக ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளது.

    லஞ்ச புகாருக்கு ஆளாகியுள்ள பெங்களூரு வளர்ச்சி ஆணைய கமிஷனர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாதது ஏன்?. லஞ்ச புகார் எழுந்துள்ளதால் அந்த ஒப்பந்தத்தை முதல்-மந்திரி எடியூரப்பா ரத்து செய்யாதது ஏன்?. இந்த லஞ்ச புகார் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் நடத்த வேண்டும். இந்த விசாரணை முடிவடையும் வரை எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.
    Next Story
    ×