என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடக துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோளுக்கு கொரோனா
Byமாலை மலர்23 Sep 2020 1:50 AM GMT (Updated: 23 Sep 2020 1:50 AM GMT)
கர்நாடக துணை முதல்-மந்திரியாக பணியாற்றி வரும் கோவிந்த் கார்ஜோளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதால், சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்களுக்கும் கொரோனா பீதி ஏற்பட்டு உள்ளது.
பெங்களூரு :
கர்நாடக துணை முதல்-மந்திரியாக பணியாற்றி வருபவர் கோவிந்த் கார்ஜோள். இவர் பொதுப்பணித்துறையையும் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் கோவிந்த் கார்ஜோளும் கலந்து கொண்டார். இந்த நிலையில் கோவிந்த் கார்ஜோளுக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்து இருந்தார். நேற்று மாலை வெளியான அறிக்கையில் கோவிந்த் கார்ஜோளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து கோவிந்த் கார்ஜோள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. டாக்டரின் அறிவுரையின்படி மருத்துவமனையில் சேர்ந்து உள்ளேன். எனக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தாக்கியுள்ளது. கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். எல்லாருடைய ஆசிர்வாதத்தால் நான் விரைவில் குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்புவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கோவிந்த் கார்ஜோளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதால், சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்களுக்கும் கொரோனா பீதி ஏற்பட்டு உள்ளது.
கர்நாடக துணை முதல்-மந்திரியாக பணியாற்றி வருபவர் கோவிந்த் கார்ஜோள். இவர் பொதுப்பணித்துறையையும் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் கோவிந்த் கார்ஜோளும் கலந்து கொண்டார். இந்த நிலையில் கோவிந்த் கார்ஜோளுக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்து இருந்தார். நேற்று மாலை வெளியான அறிக்கையில் கோவிந்த் கார்ஜோளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து கோவிந்த் கார்ஜோள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. டாக்டரின் அறிவுரையின்படி மருத்துவமனையில் சேர்ந்து உள்ளேன். எனக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தாக்கியுள்ளது. கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். எல்லாருடைய ஆசிர்வாதத்தால் நான் விரைவில் குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்புவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கோவிந்த் கார்ஜோளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதால், சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்களுக்கும் கொரோனா பீதி ஏற்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X