என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா காலத்தில் கற்பழிப்பு தொடர்புடைய 13,244 புகார்கள் பதிவு - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
Byமாலை மலர்22 Sep 2020 12:32 PM GMT (Updated: 22 Sep 2020 12:32 PM GMT)
கொரோனா காலத்தில் கற்பழிப்பு தொடர்புடைய 13,244 புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி இரானி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:
நாட்டில் கொரோனா பாதிப்புகளால் பொதுமக்கள் பெரிதும் முடங்கி போயுள்ளனர். ஊரடங்கு மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும் இயல்பு வாழ்க்கைக்கு பெருமளவில் மக்கள் திரும்பவில்லை.
இந்த சூழலில் கடந்த 14ந்தேதி தொடங்கி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் பல முக்கிய மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பாராளுமன்ற மேலவையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை மந்திரி ஸ்மிரிதி இரானி இன்று அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், கடந்த மார்ச் 1ந்தேதியில் இருந்து செப்டம்பர் 15ந்தேதி வரை இந்திய குழந்தைகள் தொண்டு அமைப்புக்கு குழந்தைகள் பாலியல் வழக்குகள் தொடர்புடைய 3,941 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.
கடந்த மார்ச் 1ந்தேதியில் இருந்து ஆகஸ்டு 31ந்தேதி வரையில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்திற்கு குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் தொடர்புடைய 420 வழக்குகளின் விவரங்கள் வந்துள்ளன.
தேசிய சைபர்கிரைம் அறிவிப்பு வலைதளத்திற்கு கடந்த மார்ச் 1ந்தேதியில் இருந்து செப்டம்பர் 18ந்தேதி வரையில் கற்பழிப்பு மற்றும் கும்பல் கற்பழிப்பு தொடர்புடைய மொத்தம் 13 ஆயிரத்து 244 புகார்கள் வந்துள்ளன என தேசிய குற்ற பதிவு துறை தெரிவித்து உள்ளது என்று இரானி தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X