என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
Byமாலை மலர்22 Sep 2020 12:05 PM GMT (Updated: 22 Sep 2020 12:05 PM GMT)
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் 58 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியதாவது:-.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் 58 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு ரூ. 517.82 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 2015 முதல், பிரதமர் 58 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்’’ என கூறி உள்ளார்
இந்த பயணங்களின்போது இந்தியா கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களின் விவரங்களுடன் 2015 மார்ச் முதல் 2019 நவம்பர் வரை பிரதமர் மோடி பார்வையிட்ட நாடுகளையும் அவர் பட்டியலிட்டு உள்ளார்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் ஏற்பட்ட நன்மைகள் குறித்த கேள்விக்கு, இந்த பயணங்களால் வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், கடல்சார், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாட்டு நாடுகளுடன் இந்தியா உறவை பலப்படுத்தியுள்ளன.
இவை நமது மக்களின் பொருளாதார வளர்ச்சியையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்காக இந்தியாவின் தேசிய வளர்ச்சியில்முக்கிய பங்களித்தன. காலநிலை மாற்றம், நாடுகடந்த குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு மற்றும் அணு பரவல் அல்லாதவை உள்ளிட்ட பலதரப்பட்ட மட்டத்தில் உலகளாவிய நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதில் இந்தியா இப்போது அதிகளவில் பங்களிப்பு செய்து வருகிறது.
மேலும் சர்வதேச கூட்டணி போன்ற உலகளாவிய பிரச்சினைகளுக்கு அதன் சொந்த தனித்துவமான முயற்சிகளை உலகுக்கு வழங்குகிறது என்று அவர் கூறி உள்ளார்.
சுய விளம்பரம் மற்றும் செல்பிக்களுக்காக பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டார். பொதுமக்களின் பணத்தை செலவழித்ததாக எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X