என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ்
Byமாலை மலர்22 Sep 2020 6:45 AM GMT (Updated: 22 Sep 2020 6:56 AM GMT)
சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
வேளாண் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியதற்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளியின் போது சபை விதிகளை மீறி நடந்து கொண்டதாக 8 எம்.பிக்களை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார்.
இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 8 பேரும் நேற்று முதல் விடிய விடிய, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், போராட்டத்தை கைவிடுவதாக எம்.பி.க்கள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த காங்கிரஸ் எம்.பி சையது நாசீர் ஹூசைன் கூறியதாவது: இடைநீக்கம் ரத்துசெய்ய வேண்டும் என்று மட்டும் நாங்கள் கோரவில்லை. வேளாண் மசோதா மீது மீண்டும் உரிய முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஆனால், அவைத்தலைவர் எதையும் கேட்பதாக தெரியவில்லை. எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டத்தொடரை புறக்கணித்துள்ளன. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். எனவே, அவர்களோடு சேர்ந்து நாங்களும் கூட்டத்தொடரை புறக்கணிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X