என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது- பைலட் உயிரிழப்பு
Byமாலை மலர்21 Sep 2020 10:17 AM GMT (Updated: 21 Sep 2020 10:17 AM GMT)
உத்தர பிரதேசத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் பயிற்சி விமானி ஒருவர் உயிரிழந்தார்.
ஆசம்கர்:
உத்தர பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் இந்திரா காந்தி ராஷ்டிரிய யுரான் அகாடமி என்ற பெயரில் மத்திய அரசின் விமான பயிற்சி நிலையம் உள்ளது. இங்கிருந்து ஒரு பயிற்சி விமானி, டிபி-20 ரக சிறிய விமானத்தில் இன்று காலை பயிற்சி மேற்கொண்டார்.
அந்த பயிற்சி விமானம் ஆசம்கர் மாவட்ட வான்பரப்பில் பறந்தபோது, திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்தது. தரையை நோக்கி பாய்ந்த விமானம், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த பயிற்சி விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
விமானம் வயலில் விழுந்ததால் சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கு திரண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X