search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிகே சிவக்குமார்
    X
    டிகே சிவக்குமார்

    திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக காங்கிரஸ் பாடுபடும்: டி.கே.சிவக்குமார்

    திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக காங்கிரஸ் பாடுபடும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக செயல்பட்டு வரும் சமூக ஆர்வலரான திருநங்கை அக்கை பத்மசாலி நேற்று டி.கே.சிவக்குமார் முன்னிலையில் பெங்களூருவில் காங்கிரசில் இணைந்தார். அதன் பிறகு மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் டி.கே.சிவக்குமார் பேசும்போது கூறியதாவது:-

    கீழ்மட்டத்தில் இருந்து சாமானிய மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து மேலே வருபவர்களை மட்டுமே நான் தலைவராக கருதுகிறேன். என் பின்னால் சுற்றுபவர்களை தலைவர்கள் என்று அழைக்க மாட்டேன். சிபாரிசு மூலம் பதவி பெறுபவர்கள், அந்த பதவியில் இருக்கும் வரை மட்டுமே அவர்களுக்கு செல்வாக்கு இருக்கும். அந்த பதவியை விட்டு சென்ற பிறகு அவர்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். இதை நான் எனது 40 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.

    காங்கிரஸ் கட்சி, திருநங்கைகளுக்கு மாநில மற்றும் தேசிய அளவில் முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது. வரும் நாட்களில் வேதனையில் உள்ள திருநங்கை சமூகத்தினர், கவுரவமான வாழ்க்கை வாழ தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டியது அவசியம். ராகுல் காந்தியும், திருநங்கை சமூகத்திற்கு உரிய அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளார். திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக காங்கிரஸ் பாடுபடும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
    Next Story
    ×