என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக காங்கிரஸ் பாடுபடும்: டி.கே.சிவக்குமார்
Byமாலை மலர்21 Sep 2020 2:07 AM GMT (Updated: 21 Sep 2020 2:07 AM GMT)
திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக காங்கிரஸ் பாடுபடும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு :
திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக செயல்பட்டு வரும் சமூக ஆர்வலரான திருநங்கை அக்கை பத்மசாலி நேற்று டி.கே.சிவக்குமார் முன்னிலையில் பெங்களூருவில் காங்கிரசில் இணைந்தார். அதன் பிறகு மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் டி.கே.சிவக்குமார் பேசும்போது கூறியதாவது:-
கீழ்மட்டத்தில் இருந்து சாமானிய மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து மேலே வருபவர்களை மட்டுமே நான் தலைவராக கருதுகிறேன். என் பின்னால் சுற்றுபவர்களை தலைவர்கள் என்று அழைக்க மாட்டேன். சிபாரிசு மூலம் பதவி பெறுபவர்கள், அந்த பதவியில் இருக்கும் வரை மட்டுமே அவர்களுக்கு செல்வாக்கு இருக்கும். அந்த பதவியை விட்டு சென்ற பிறகு அவர்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். இதை நான் எனது 40 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.
காங்கிரஸ் கட்சி, திருநங்கைகளுக்கு மாநில மற்றும் தேசிய அளவில் முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது. வரும் நாட்களில் வேதனையில் உள்ள திருநங்கை சமூகத்தினர், கவுரவமான வாழ்க்கை வாழ தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டியது அவசியம். ராகுல் காந்தியும், திருநங்கை சமூகத்திற்கு உரிய அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளார். திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக காங்கிரஸ் பாடுபடும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக செயல்பட்டு வரும் சமூக ஆர்வலரான திருநங்கை அக்கை பத்மசாலி நேற்று டி.கே.சிவக்குமார் முன்னிலையில் பெங்களூருவில் காங்கிரசில் இணைந்தார். அதன் பிறகு மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் டி.கே.சிவக்குமார் பேசும்போது கூறியதாவது:-
கீழ்மட்டத்தில் இருந்து சாமானிய மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து மேலே வருபவர்களை மட்டுமே நான் தலைவராக கருதுகிறேன். என் பின்னால் சுற்றுபவர்களை தலைவர்கள் என்று அழைக்க மாட்டேன். சிபாரிசு மூலம் பதவி பெறுபவர்கள், அந்த பதவியில் இருக்கும் வரை மட்டுமே அவர்களுக்கு செல்வாக்கு இருக்கும். அந்த பதவியை விட்டு சென்ற பிறகு அவர்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். இதை நான் எனது 40 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.
காங்கிரஸ் கட்சி, திருநங்கைகளுக்கு மாநில மற்றும் தேசிய அளவில் முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது. வரும் நாட்களில் வேதனையில் உள்ள திருநங்கை சமூகத்தினர், கவுரவமான வாழ்க்கை வாழ தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டியது அவசியம். ராகுல் காந்தியும், திருநங்கை சமூகத்திற்கு உரிய அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளார். திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக காங்கிரஸ் பாடுபடும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X