என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகளை, முதலாளிகளுக்கு அடிமைகளாக உருவாக்குகிறார் - பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி காட்டம்
Byமாலை மலர்20 Sep 2020 11:38 PM GMT (Updated: 20 Sep 2020 11:38 PM GMT)
நாட்டை ஒருபோதும் வெற்றிபெற விடாத முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மோடி உருவாக்குகிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மத்திய அரசின் விவசாய விரோத கறுப்பு சட்டம் மூலம் வேளாண் உற்பத்தி சந்தைக்குழு அல்லது வேளாண் சந்தைகள் முடிவுக்கு வந்தால், விவசாயிகள் எவ்வாறு குறைந்தபட்ச ஆதரவு விலையை பெறுவார்கள்? குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஏன் உத்தரவாதம் அளிக்கக்கூடாது? நாட்டை ஒருபோதும் வெற்றிபெற விடாத முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மோடி உருவாக்குகிறார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
முன்னதாக அவர் வெளியிட்டிருந்த மற்றொரு பதிவில், ‘மோடி அரசு மீதான நம்பிக்கையை விவசாயிகள் இழந்து விட்டார்கள். ஏனெனில் பணமதிப்பு நீக்கம், தவறான ஜி.எஸ்.டி மற்றும் டீசல் மீதான அதிக வரி போன்றவை அமல்படுத்தியதில் இருந்தே மோடிஜியின் பேச்சும், செயலும் வெவ்வேறாக இருக்கிறது. இதனால் விழிப்படைந்த விவசாயிகள், மோடி அரசு வேளாண் மசோதா மூலம் தனது நண்பர்களின் வியாபாரத்தை பெருக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மீது தாக்குதல் நடத்துகிறது என்பதை அறிந்துள்ளனர்’ என்றும் கூறியிருந்தார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மத்திய அரசின் விவசாய விரோத கறுப்பு சட்டம் மூலம் வேளாண் உற்பத்தி சந்தைக்குழு அல்லது வேளாண் சந்தைகள் முடிவுக்கு வந்தால், விவசாயிகள் எவ்வாறு குறைந்தபட்ச ஆதரவு விலையை பெறுவார்கள்? குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஏன் உத்தரவாதம் அளிக்கக்கூடாது? நாட்டை ஒருபோதும் வெற்றிபெற விடாத முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மோடி உருவாக்குகிறார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
முன்னதாக அவர் வெளியிட்டிருந்த மற்றொரு பதிவில், ‘மோடி அரசு மீதான நம்பிக்கையை விவசாயிகள் இழந்து விட்டார்கள். ஏனெனில் பணமதிப்பு நீக்கம், தவறான ஜி.எஸ்.டி மற்றும் டீசல் மீதான அதிக வரி போன்றவை அமல்படுத்தியதில் இருந்தே மோடிஜியின் பேச்சும், செயலும் வெவ்வேறாக இருக்கிறது. இதனால் விழிப்படைந்த விவசாயிகள், மோடி அரசு வேளாண் மசோதா மூலம் தனது நண்பர்களின் வியாபாரத்தை பெருக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மீது தாக்குதல் நடத்துகிறது என்பதை அறிந்துள்ளனர்’ என்றும் கூறியிருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X