search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    விவசாயிகளை, முதலாளிகளுக்கு அடிமைகளாக உருவாக்குகிறார் - பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி காட்டம்

    நாட்டை ஒருபோதும் வெற்றிபெற விடாத முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மோடி உருவாக்குகிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மத்திய அரசின் விவசாய விரோத கறுப்பு சட்டம் மூலம் வேளாண் உற்பத்தி சந்தைக்குழு அல்லது வேளாண் சந்தைகள் முடிவுக்கு வந்தால், விவசாயிகள் எவ்வாறு குறைந்தபட்ச ஆதரவு விலையை பெறுவார்கள்? குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஏன் உத்தரவாதம் அளிக்கக்கூடாது? நாட்டை ஒருபோதும் வெற்றிபெற விடாத முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மோடி உருவாக்குகிறார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    முன்னதாக அவர் வெளியிட்டிருந்த மற்றொரு பதிவில், ‘மோடி அரசு மீதான நம்பிக்கையை விவசாயிகள் இழந்து விட்டார்கள். ஏனெனில் பணமதிப்பு நீக்கம், தவறான ஜி.எஸ்.டி மற்றும் டீசல் மீதான அதிக வரி போன்றவை அமல்படுத்தியதில் இருந்தே மோடிஜியின் பேச்சும், செயலும் வெவ்வேறாக இருக்கிறது. இதனால் விழிப்படைந்த விவசாயிகள், மோடி அரசு வேளாண் மசோதா மூலம் தனது நண்பர்களின் வியாபாரத்தை பெருக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மீது தாக்குதல் நடத்துகிறது என்பதை அறிந்துள்ளனர்’ என்றும் கூறியிருந்தார்.
    Next Story
    ×