என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
30 ஆண்டுகளாக 3 கி.மீ தொலைவிற்கு கால்வாய் அமைத்த விவசாயி - டிராக்டர் பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்
Byமாலை மலர்20 Sep 2020 5:18 PM GMT (Updated: 20 Sep 2020 5:18 PM GMT)
30 ஆண்டுகளாக 3 கி.மீ தொலைவிற்கு கால்வாய் அமைத்த விவசாயிக்கு மஹிந்திரா நிறுவனம் டிராக்டர் பரிசளித்துள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள கொத்திலாவா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயியான லவுங்கி புய்யான், தனது கிராமத்திற்காக தனி ஒரு ஆளாக முயற்சி செய்து 30 ஆண்டுகளாக 3 கி.மீ. தூரத்திற்கு மலைப்பகுதியில் இருந்து கால்வாய் ஒன்றை வெட்டியுள்ளார்.
இந்த கால்வாய் அங்குள்ள கால்நடைகளுக்கும், வயலுக்கும் பெரும் உதவியாக இருப்பதாக ஊர்மக்கள் கூறி உள்ளனர். இவரது இந்த செயல் சமூக வலைதளங்கள் மூலம் வைரலாகி பலரின் பாராட்டைப் பெற்றது. இதற்கிடையில் இந்த தகவல் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்திற்கு சென்றுள்ளது.
இதைத் தொடர்ந்து விவசாயி லவுங்கி புய்யான் சேவையை பாராட்டி மஹிந்திரா நிறுவனம் டிராக்டர் ஒன்றை பரிசளித்துள்ளது. இந்த தகவலை ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் அவர், “தனி மனிதராக இவர் அமைத்துள்ள இந்த கால்வாய் பிரமிடுகள், தாஜ்மகாலை விட குறைவானது அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள கொத்திலாவா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயியான லவுங்கி புய்யான், தனது கிராமத்திற்காக தனி ஒரு ஆளாக முயற்சி செய்து 30 ஆண்டுகளாக 3 கி.மீ. தூரத்திற்கு மலைப்பகுதியில் இருந்து கால்வாய் ஒன்றை வெட்டியுள்ளார்.
இந்த கால்வாய் அங்குள்ள கால்நடைகளுக்கும், வயலுக்கும் பெரும் உதவியாக இருப்பதாக ஊர்மக்கள் கூறி உள்ளனர். இவரது இந்த செயல் சமூக வலைதளங்கள் மூலம் வைரலாகி பலரின் பாராட்டைப் பெற்றது. இதற்கிடையில் இந்த தகவல் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்திற்கு சென்றுள்ளது.
இதைத் தொடர்ந்து விவசாயி லவுங்கி புய்யான் சேவையை பாராட்டி மஹிந்திரா நிறுவனம் டிராக்டர் ஒன்றை பரிசளித்துள்ளது. இந்த தகவலை ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் அவர், “தனி மனிதராக இவர் அமைத்துள்ள இந்த கால்வாய் பிரமிடுகள், தாஜ்மகாலை விட குறைவானது அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X