search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ராஜஸ்தானில் தபால் நிலையத்தில் ரூ.3½ லட்சம் கொள்ளை

    ராஜஸ்தான் தபால்நிலையத்தில் மர்மநபர்களால் ரூ.3 லட்சத்து 54 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பிகானர்:

    ராஜஸ்தானின் பிகானர் என்ற இடத்தில் உள்ள தபால்நிலையத்தில் நேற்று 2 ஊழியர்கள் பணியில் இருந்தனர். மேலும் 3 வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர். அப்போது திடீரென அங்கு புகுந்த 2 மர்மநபர்கள், தபால்நிலையத்தின் வாசற்கதவை இழுத்து பூட்டினர்.

    உடனே கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அந்த மர்மநபர்கள் சுட்டு, அங்கிருந்த ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் பயமுறுத்தினர். அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் செய்வது அறியாமல் தவித்தனர். அதற்குள் தபால்நிலையத்தில் இருந்த ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×