என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டவிரோத இறக்குமதி- கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்குப்பதிவு
Byமாலை மலர்19 Sep 2020 4:20 AM GMT (Updated: 19 Sep 2020 4:20 AM GMT)
அமீரக தூதரகம் மூலம் சொந்த பயன்பாட்டிற்காக அதிகாரிகள் இறக்குமதி செய்த பொருட்களை பெற்றதாக கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சட்ட விரோதமாக தூதரகம் வழியாக மத நூல்கள் கொண்ட பார்சல் மற்றும் 18 ஆயிரம் கிலோ பேரிச்சம்பழத்தை பெற்றுக்கொண்டதாக கேரள அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கேரள அரசு மீது சுங்கத்துறை 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், தூதரக அதிகாரிகள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்து வைத்திருந்த அந்தப் பொருட்களை, கேரள அரசாங்கத்தில் அதிகாரம் படைத்த சில நபர்கள் பரிசாக பெற்றுச் சென்றதாகவும், அவற்றை குறிப்பிட்ட இடங்களில் விநியோகம் செய்வதற்காக பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
‘வெளிநாட்டு அரசாங்கத்திடமிருந்து பொருட்களை பெறுவதற்கு தடை இருப்பதை மாநில அரசு அதிகாரிகள் நன்கு அறிவார்கள். பொது நிர்வாகத்தின் கீழ் உள்ள மாநில நெறிமுறைத் துறை, ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு 2017 ஆம் ஆண்டில் 18,000 கிலோ பேரிச்சம்பழத்தையும், 2020 ஆம் ஆண்டில் இஸ்லாமிய மத நூல்கள் கொண்ட 4,000 கிலோ பார்சல்களையும் இறக்குமதி செய்ய வரி விலக்கு அளித்தது’ என்றும் சுங்கத்துறை கூறி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X