என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா ஒரு நாடகம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
Byமாலை மலர்18 Sep 2020 5:16 PM GMT (Updated: 18 Sep 2020 5:16 PM GMT)
மத்திய மந்திரி பதவியில் இருந்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தது ஒரு நாடகம் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
புதுடெல்லி:
மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசில் சிரோண்மணி அகாலி தளமும் இடம் பெற்றிருந்தது. இக்கட்சிக்கு மக்களவையில் 2 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான சிரோண்மணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், அக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக இருக்கிறார்.
மற்றொரு உறுப்பினராக அவரது மனைவி ஹர்சிம்ரத் கவுர் பாதல், மோடி அரசில் உணவு பதப்படுத்துதல் தொழில் மந்திரியாக இருந்துவந்தார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் மக்களவையில் விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது.
வேளாண் துறை தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மசோதாக்களுக்கு ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சியான சிரோண்மணி அகாலி தளம் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதா கடந்த செவ்வாய்க்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது, சிரோண்மணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மசோதாவுக்கு எதிரான வாக்கு அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்களவையில் மற்ற 2 வேளாண் மசோதாக்கள் மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் சுக்பீர் சிங் பாதல் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கு சிரோண்மணி அகாலி தளத்தின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று திடீரென்று அறிவித்தார்.
இதையடுத்து சிறிது நேரத்தில் மத்திய மந்திரி பதவியில் இருந்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தையும் வழங்கினார்.
இந்நிலையில், இது ஒரு நாடகம் என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உண்மையின் பக்கம் நிற்காமல், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் சிரோண்மணி அகாலி தளம் நீடிக்கிறது. மசோதாக்கள் குறித்து அமைச்சரவை முடிவு எடுக்கும்போதே, ஹர்சிம்ரத் கவுர் பாதல் எதிர்க்காதது ஏன்?. அப்போதே ராஜினாமா செய்து, பா.ஜ.க. வுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றிருக்கலாமே? நாடகம் நடத்தாமல் விவசாயிகள் பக்கம் நில்லுங்கள் என பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X