என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்களவையில் 4 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்- அவை நாளை காலை வரை ஒத்திவைப்பு
Byமாலை மலர்18 Sep 2020 9:41 AM GMT (Updated: 18 Sep 2020 10:36 AM GMT)
மாநிலங்களவையில் ஹோமியோபதி மத்திய கவுன்சில் மசோதா உள்ளிட்ட 4 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுடெல்லி:
மழைக்கால கூட்டத்தொடரின் 5-வது நாளான இன்று காலை மாநிலங்களவை கூடியதும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி அசோக் கஸ்தி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்பை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு வாசித்தார். அத்துடன் அரை மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின்னர் அவை நடவடிக்கை தொடங்கியதும், ஹோமியோபதி மத்திய கவுன்சில் (திருத்த) மசோதா 2020 மற்றும் இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (திருத்த) மசோதா மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்பின்னர், மந்திரிகளுக்கான சம்பளம் மற்றும் படிகள் (திருத்த) மசோதா 2020, எம்.பி.க்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வதிய (திருத்தம்) மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. அதன்பின்னர் மாநிலங்களவை நடவடிக்கைகள் நாளை காலை 9 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X