search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிஎஸ்4 வாகனங்கள்
    X
    பிஎஸ்4 வாகனங்கள்

    டெல்லியில் பிஎஸ்-4 ரக டீசல் வாகனங்களை பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி... ஆனால் ஒரு நிபந்தனை

    ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்னதாக பொது பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட பிஎஸ்-4 ரக டீசல் வாகனங்களை பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    பிஎஸ் 4 என்ஜின் ரக வாகனங்களை 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு விற்பனை செய்யக் கூடாது என 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், தற்போது கொரோனா காலத்தில் வாகன விற்பனை சரிந்த நிலையில், பிஎஸ் 4 வாகன விற்பனை தொடர்பாக வாகன விற்பனையாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில், கொரோனா காலத்தில் வாகன விற்பனை குறைந்துவிட்டதாகவும், அதனால் உச்ச நீதிமன்ற உத்தவை கடைப்பிடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிஎஸ் 4 ரக வாகனங்கள் விற்பனையில் மோசடி நடைபெற்றிருக்கலாம் என்ற அடிப்படையில், பி.எஸ்.4 ரக வாகனங்களின் பதிவுக்கு தடை விதித்தது. மறு உத்தரவு வரும் வரை பி.எஸ்.4 இன்ஜின் ரக வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தது. 

    இந்நிலையில், ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்னதாக டெல்லி மாநகராட்சி மற்றும் டெல்லி காவல்துறையால் வாங்கப்பட்ட பிஎஸ்-4 ரக டீசல் வாகனங்களை பதிவு செய்துகொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.  

    ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்னர் வாங்கப்பட்ட மற்றும் அத்தியாவசிய பொது பயன்பாட்டு சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் டீசல் வாகனங்கள் பிஎஸ்-4 விதிமுறைகளின்படி பதிவு செய்யப்படும் என்றும், ஏப்ரல் 1-க்குப் பிறகு வாங்கப்பட்ட வாகனங்கள் பிஎஸ்-6 விதிமுறைகளின்படி பதிவு செய்யப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Next Story
    ×