என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேளாண் மசோதாக்களுக்கு எதிராக 3 நாட்கள் ரெயில் மறியல் போராட்டம்- பஞ்சாப் விவசாய சங்கம் அறிவிப்பு
Byமாலை மலர்18 Sep 2020 3:11 AM GMT (Updated: 18 Sep 2020 3:11 AM GMT)
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை ரெயில் மறியல் போராட்டம் நடத்த விவசாய சங்கம் முடிவு செய்துள்ளது.
சண்டிகர்:
கடந்த14-ந் தேதி தொடங்கிய பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் மக்களவையில் விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது.
வேளாண் துறை தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த மசோதாக்களுக்கு ஆளும் பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தார். இந்த மசோதாக்களுக்கு பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் வேளாண் மசோதாக்களுக்க எதிர்ப்பு தெரிவித்து 3 நாட்கள் தொடர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 24 முதல் 26 வரை ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக விவசாய சங்க பொதுச்செயலாளர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்தார்.
ஏற்கனவே பல்வேறு விவசாய அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) முறையை அகற்றுவதற்கு வழிவகுக்கும் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X