search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்வப்னா சுரேஷ்
    X
    ஸ்வப்னா சுரேஷ்

    கேரளாவில் தங்க கடத்தலில் ஈடுபட்ட ஸ்வப்னா சுரேஷுடன் 6 பெண் போலீசார் செல்பி எடுத்தார்களா?

    மருத்துவமனையில் பணியில் இருந்த 6 பெண் போலீசார், ஸ்வப்னா சுரேஷுடன் செல்பி எடுத்துக் கொண்டது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டது.
    திருச்சூர்:

    கேரளாவில் கடந்த ஜூலை மாதம், அரசு அலுவலக முகவரியில் கடத்தப்பட்ட ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த வழக்கில் முதல்-மந்திரி அலுவலகத்தில் பணியாற்றிய பெண் அலுவலர் ஸ்வப்னா சுரேசை கைது செய்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

    இந்தநிலையில் ஸ்வப்னா சுரேஷ், கடந்த 8 நாட்களில் உடல் நிலையை காரணம் காட்டி 2 முறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கிருந்த நர்ஸ் ஒருவரின் செல்போனில் இருந்து யாருக்கோ அழைப்பு செய்ய முயற்சித்ததாக புகார் எழுந்தது.

    அதேபோல அந்த மருத்துவமனையில் பணியில் இருந்த 6 பெண் போலீசார், ஸ்வப்னா சுரேஷுடன் செல்பி எடுத்துக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக 6 பெண் போலீசாரிடம் நேற்று விசாரணை தொடங்கப்பட்டது. புகாரில் முகாந்திரம் இருந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.
    Next Story
    ×