search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    ராஜஸ்தானில் இன்று மேலும் 802 பேருக்கு கொரோனா தொற்று

    ராஜஸ்தானில் இன்று 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ஜெய்பூர்:

    ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ராஜஸ்தானில் இன்று 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,700 ஆக அதிகரித்துள்ளது.

    இன்று 7 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,271 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 17,541 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 86,333 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
    Next Story
    ×