search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 11 கடற்படை அதிகாரிகள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு முக்கிய தகவல்களை கசியவிட்டது கடந்த டிசம்பர் மாதம் தெரியவந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கைதான கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக கடந்த ஜூன் 15-ந் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த குஜராத் மாநிலம் கோத்ராவை சேர்ந்த கிட்டலி இம்ரான் (வயது 37) என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

    கிட்டலி இம்ரான் எல்லை தாண்டிய ஜவுளி வர்த்தகம் என்ற போர்வையில், பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்து பணியாற்றியது கண்டறியப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×