என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா மையத்தில் இளம்பெண்ணை கற்பழித்த ஊழியர்
Byமாலை மலர்13 Sep 2020 10:23 PM GMT (Updated: 13 Sep 2020 10:23 PM GMT)
குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி கொரோனா தனிமை மையத்தில் இளம்பெண்ணை கற்பழித்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
தானே:
மும்பையை அடுத்த தானே மாவட்டம் மிராரோடு பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கு, அண்மையில் கொரோனா அறிகுறி ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண் தனது 10 மாத குழந்தையுடன் அங்குள்ள தனிமை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அந்த தனிமை மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த 27 வயது வாலிபர், அந்த பெண்ணை மிரட்டி கற்பழித்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து வெளியில் கூறினால் குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன இளம்பெண் இது குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஊழியர், 3 சந்தர்ப்பங்களில் இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண், நேற்று முன்தினம் சம்பவம் குறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஊழியரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையை அடுத்த தானே மாவட்டம் மிராரோடு பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கு, அண்மையில் கொரோனா அறிகுறி ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண் தனது 10 மாத குழந்தையுடன் அங்குள்ள தனிமை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அந்த தனிமை மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த 27 வயது வாலிபர், அந்த பெண்ணை மிரட்டி கற்பழித்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து வெளியில் கூறினால் குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன இளம்பெண் இது குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஊழியர், 3 சந்தர்ப்பங்களில் இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண், நேற்று முன்தினம் சம்பவம் குறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஊழியரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X