என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமூக ஊடகங்களில் அவதூறு பதிவுகள் - நீதிபதி ரமணா வேதனை
Byமாலை மலர்12 Sep 2020 10:58 PM GMT (Updated: 12 Sep 2020 10:58 PM GMT)
நீதிபதிகள் கிசுகிசுகளுக்கும், அவதூறான சமூக ஊடக பதிவுகளுக்கும் பலியாகின்றனர் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என்.வி.ரமணா, ஒரு வேதனையை பதிவு செய்தார்.
புதுடெல்லி:
ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என்.வி.ரமணா, ஒரு வேதனையை பதிவு செய்தார்.
அவர் பேசும்போது, “நீதிபதிகள் மென்மையான தாக்குதல் இலக்காக கருதப்படுகிறார்கள். சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் பெருக்கத்தால் இந்த பிரச்சினை மேலும் சிக்கலாகி இருக்கிறது. நீதிபதிகள் கிசுகிசுகளுக்கும், அவதூறான சமூக ஊடக பதிவுகளுக்கும் பலியாகின்றனர்” என குறிப்பிட்டார்.
சமீபத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பற்றி மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் டுவிட்டரில் வெளியிட்ட ஒரு பதிவு சர்ச்சையாகி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, அவரை தண்டிக்கும் நிலை உருவானது இங்கு நினைவுகூரத்தக்கது.
தொடர்ந்து நீதிபதி ரமணா பேசுகையில், “நீதிபதிகள் எல்லோரும் சொகுசு வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற தவறான புரிதல் இருப்பதாக தெரிகிறது. ஆனால் உண்மை வேறாக உள்ளது. இதை மற்றவர்கள் புரிந்துகொள்வது கடினமானது. தற்போதைய சூழ்நிலையில், வேறு எந்த தொழிலுடனும் ஒப்பிடமுடியாதபடி நீதிபதிகள் தியாகங்கள் செய்ய வேண்டியதிருக்கிறது” என குறிப்பிட்டார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என்.வி.ரமணா, ஒரு வேதனையை பதிவு செய்தார்.
அவர் பேசும்போது, “நீதிபதிகள் மென்மையான தாக்குதல் இலக்காக கருதப்படுகிறார்கள். சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் பெருக்கத்தால் இந்த பிரச்சினை மேலும் சிக்கலாகி இருக்கிறது. நீதிபதிகள் கிசுகிசுகளுக்கும், அவதூறான சமூக ஊடக பதிவுகளுக்கும் பலியாகின்றனர்” என குறிப்பிட்டார்.
சமீபத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பற்றி மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் டுவிட்டரில் வெளியிட்ட ஒரு பதிவு சர்ச்சையாகி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, அவரை தண்டிக்கும் நிலை உருவானது இங்கு நினைவுகூரத்தக்கது.
தொடர்ந்து நீதிபதி ரமணா பேசுகையில், “நீதிபதிகள் எல்லோரும் சொகுசு வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற தவறான புரிதல் இருப்பதாக தெரிகிறது. ஆனால் உண்மை வேறாக உள்ளது. இதை மற்றவர்கள் புரிந்துகொள்வது கடினமானது. தற்போதைய சூழ்நிலையில், வேறு எந்த தொழிலுடனும் ஒப்பிடமுடியாதபடி நீதிபதிகள் தியாகங்கள் செய்ய வேண்டியதிருக்கிறது” என குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X