search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜ்நாத் சிங்
    X
    ராஜ்நாத் சிங்

    இந்திய பாதுகாப்பு வலிமையின் நோக்கம் அமைதிக்கான விருப்பம் மட்டுமே- ராஜ்நாத் சிங்

    இந்திய பாதுகாப்பு வலிமையின் நோக்கம் அமைதிக்கான விருப்பம் மட்டுமே. அண்டை நாடுகளிடமிருந்தும் இந்தியா இதையே எதிர்பார்கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படையை வலுப்படுத்தும் விதமாக பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன், 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக 5 ரபேல் விமானங்கள் கடந்த ஜூலை 29-ந்தேதி இந்தியா வந்து சேர்ந்தன.

    அவற்றை முறைப்படி விமான விமானப்படையில் இணைக்கும் நிகழ்ச்சி, அரியானா மாநிலம் அம்பாலாவில் நடைபெற்றது? விமானப்படை தளத்தில் விமானப்படையின் 17வது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் 5 விமானங்களும் இணைக்கப்பட்டன.

    முன்னதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி ஆகியோர் அம்பாலா விமானப்படை தளம் வருகை தந்தனர்.

    முன்னதாக பாரம்பரிய முறைப்படி சர்வ தர்மா பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி பதவுரியா, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். விழாவில் ரபேல் ஜெட் விமானங்களுக்கு நீர் வணக்கம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து போர் விமானங்கள் சர்வ மத பூஜைகளுடன் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும் போது கூறியதாவது:-

    ரபேல் விமானத்தை இந்தியன் விமானப்படையுட் இணைப்பது இந்தியாவிற்கும் பிரான்சுக்கும் இடையிலான வலுவான உறவுகளை குறிக்கிறது. எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான  உறவுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. ரபேல் இணைப்பு என்பது முழு உலகிற்கும் குறிப்பாக நமது இறையாண்மையைக் கவனிப்பவர்களுக்கு மிகப்பெரிய மற்றும் கடுமையான செய்தி ஆகும். 

    எனது சமீபத்திய வெளிநாட்டு பயணத்தில், இந்தியாவைப் பற்றிய பார்வையை உலகத்தின் முன் வைத்தேன். எந்தவொரு சூழ்நிலையிலும் எங்கள் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சமரசம் செய்யக்கூடாது என்ற எங்கள் தீர்மானத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தினேன். இதை நோக்கி எல்லாவற்றையும் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றார். இந்திய பாதுகாப்பு வலிமையின் நோக்கம் அமைதிக்கான விருப்பம் மட்டுமே. அண்டை நாடுகளிடமிருந்தும் இந்தியா இதையே எதிர்பார்கிறது.

    இந்திய விமானப்படை அதன் செயல்பாட்டுக் கடமைகளை நிறைவேற்ற முழுமையாக தயாராக உள்ளது என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது.  இந்திய விமானப்படையின் எங்கள் சகாக்களுக்கு இன்று வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். அண்மையில் எல்லையில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் போது, எல்.ஐ.சி அருகே இந்திய விமானப்படை எடுத்த விரைவான நடவடிக்கை உங்கள் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது என கூறினார்.
    Next Story
    ×