என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய விமானப்படையில் ரபேல் போர் விமானங்கள் இன்று முறைப்படி சேர்ப்பு
Byமாலை மலர்9 Sep 2020 10:13 PM GMT (Updated: 9 Sep 2020 10:13 PM GMT)
ரபேல் போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி சேர்க்கப்படுகின்றன.
புதுடெல்லி:
உலகின் அதிநவீன போர் விமானமான ரபேல் விமானங்களை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் தயாரித்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
முதல்கட்டமாக, 5 ரபேல் போர் விமானங்கள் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த விமானங்கள், ஜூலை 27-ந் தேதி, அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்துக்கு வந்து சேர்ந்தன.
இந்நிலையில், இந்த விமானங்கள் இன்று (வியாழக்கிழமை) முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்படுகின்றன. இதற்கான விழா, அம்பாலா விமானப்படை நிலையத்தில் நடக்கிறது.
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், பிரான்ஸ் ராணுவ மந்திரி பிளாரன்ஸ் பார்லி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள். முன்னதாக, டெல்லியில் பிளாரன்ஸ் பார்லிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.
ரபேல் விமான சேர்ப்பு நிகழ்ச்சியில், இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ரவத், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீஷ்ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
பிரான்ஸ் குழு சார்பில், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இமானுவேல் லெனைன், விமானப்படை தளபதி எரிக் அடல்லட், விமானப்படை துணைத்தளபதி, ரபேல் விமானத்தை தயாரித்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தின் தலைவர் எரிக் டிரேப்பியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
முதலில், ரபேல் விமானம், முறைப்படி அறிமுகப்படுத்தப்படும். ‘சர்வ தர்ம பூஜா’ என்ற சம்பிரதாய பூஜை செய்யப்படும். ரபேல் விமானங்களும், தேஜாஸ் விமானங்களும் வானில் சாகசங்கள் நிகழ்த்திக் காட்டும்.
ரபேல் விமானங்களுக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்படும். பின்னர், முறைப்படி ரபேல் விமானத்தை விமானப்படையில் சேர்ப்பதுடன் நிகழ்ச்சி முடிவடையும்.
இந்திய விமானப்படையின் 17 படைப்பிரிவில் (கோல்டன் ஆரோஸ்) ரபேல் விமானங்கள் சேர்க்கப்படும்.
நிகழ்ச்சிக்கு பின்னர், இந்திய-பிரான்ஸ் குழுக்கள் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும்.
உலகின் அதிநவீன போர் விமானமான ரபேல் விமானங்களை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் தயாரித்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
முதல்கட்டமாக, 5 ரபேல் போர் விமானங்கள் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த விமானங்கள், ஜூலை 27-ந் தேதி, அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்துக்கு வந்து சேர்ந்தன.
இந்நிலையில், இந்த விமானங்கள் இன்று (வியாழக்கிழமை) முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்படுகின்றன. இதற்கான விழா, அம்பாலா விமானப்படை நிலையத்தில் நடக்கிறது.
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், பிரான்ஸ் ராணுவ மந்திரி பிளாரன்ஸ் பார்லி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள். முன்னதாக, டெல்லியில் பிளாரன்ஸ் பார்லிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.
ரபேல் விமான சேர்ப்பு நிகழ்ச்சியில், இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ரவத், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீஷ்ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
பிரான்ஸ் குழு சார்பில், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இமானுவேல் லெனைன், விமானப்படை தளபதி எரிக் அடல்லட், விமானப்படை துணைத்தளபதி, ரபேல் விமானத்தை தயாரித்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தின் தலைவர் எரிக் டிரேப்பியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
முதலில், ரபேல் விமானம், முறைப்படி அறிமுகப்படுத்தப்படும். ‘சர்வ தர்ம பூஜா’ என்ற சம்பிரதாய பூஜை செய்யப்படும். ரபேல் விமானங்களும், தேஜாஸ் விமானங்களும் வானில் சாகசங்கள் நிகழ்த்திக் காட்டும்.
ரபேல் விமானங்களுக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்படும். பின்னர், முறைப்படி ரபேல் விமானத்தை விமானப்படையில் சேர்ப்பதுடன் நிகழ்ச்சி முடிவடையும்.
இந்திய விமானப்படையின் 17 படைப்பிரிவில் (கோல்டன் ஆரோஸ்) ரபேல் விமானங்கள் சேர்க்கப்படும்.
நிகழ்ச்சிக்கு பின்னர், இந்திய-பிரான்ஸ் குழுக்கள் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X