என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜனாதிபதி மாளிகையில் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை
Byமாலை மலர்9 Sep 2020 4:34 PM GMT (Updated: 9 Sep 2020 4:34 PM GMT)
ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:
ஜனாதிபதி மாளிகையில் உள்ள கோர்கா ரைபிள்ஸ் படை வீரர்களுக்கான விடுதியில் நேபாளத்தின் திகயான் பகுதியைச் சேர்ந்த தேக் பகதூர் தபா (40), என்பவர் ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், கோர்கா ரைபிள்ஸ் படையினருக்கான விடுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் மின் விசிறியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடும் முதுகு வலியும், உயர் ரத்த அழுத்தமும் இருந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக புதுடெல்லி காவல் உதவி ஆணையர் தீபக் யாதவ் தெரிவித்துள்ளளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி மாளிகையில் ராணுவ வீரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சகவீரர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X