search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
    X
    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

    மக்களவை துணை சபாநாயகரை தேர்வு செய்யவேண்டும் - சபாநாயகரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை துணை சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 14-ம் தேதி தொடங்கி அக்டோபர் 1-ம் தேதிவரை நடைபெற உள்ளது.

    இந்தகூட்டத் தொடரின் முதல் நாளில், மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. துணைத் தலைவர் ஹரிவன்ஷின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்கான வேட்பு மனு தாக்கல் 7-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய 11ம் தேதி கடைசி நாள் ஆகும். 

    மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஹரிவன்ஷ், தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) சார்பில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
     
    இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை துணை சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. 

    இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், மக்களவை தேர்தல் முடிந்து ஓராண்டாகியும் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படவில்லை. எனவே மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
    காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
    Next Story
    ×