என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்.ஐ.சி.யின் 25 சதவீத பங்குகள் விற்பனையா? பிரதமர் மோடி மீது ராகுல் பாய்ச்சல்
Byமாலை மலர்8 Sep 2020 11:48 PM GMT (Updated: 8 Sep 2020 11:48 PM GMT)
எல்.ஐ.சி. என்று அழைக்கப்படுகிற ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் 25 சதவீத பங்குகள் விற்பனையா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி:
எல்.ஐ.சி. என்று அழைக்கப்படுகிற ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த பத்திரிகை செய்தியை தனது டுவிட்டர் கணக்கில் இணைத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், ‘‘அரசு நிறுவனங்களை விற்பதற்கு பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். நாட்டின் பொருளாதாரத்துக்கு சுயமாக உருவாக்கப்பட்ட சரிவை ஈடுசெய்வதற்காக, நாட்டின் சொத்துகள் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனை செய்யப்படுகின்றன. மக்களின் எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் பணயம் வைத்து எல்.ஐ.சி.யை விற்பனை செய்வது, மோடி அரசின் மற்றுமொரு வெட்கக்கேடான முயற்சி ஆகும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
எல்.ஐ.சி. என்று அழைக்கப்படுகிற ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த பத்திரிகை செய்தியை தனது டுவிட்டர் கணக்கில் இணைத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், ‘‘அரசு நிறுவனங்களை விற்பதற்கு பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். நாட்டின் பொருளாதாரத்துக்கு சுயமாக உருவாக்கப்பட்ட சரிவை ஈடுசெய்வதற்காக, நாட்டின் சொத்துகள் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனை செய்யப்படுகின்றன. மக்களின் எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் பணயம் வைத்து எல்.ஐ.சி.யை விற்பனை செய்வது, மோடி அரசின் மற்றுமொரு வெட்கக்கேடான முயற்சி ஆகும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X