என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய எல்லையில் சுற்றி திரிந்த கால்நடைகள் - நல்லெண்ண அடிப்படையில் சீனாவிடம் ஒப்படைப்பு
Byமாலை மலர்7 Sep 2020 5:55 PM GMT (Updated: 7 Sep 2020 5:55 PM GMT)
எல்லையில் சுற்றி திரிந்த கால்நடைகளை நல்லெண்ண அடிப்படையில் சீனாவிடம் இந்திய ராணுவம் ஒப்படைத்துள்ளது.
கிழக்கு காமெங்:
அருணாசல பிரதேசத்தின் கிழக்கு காமெங் பகுதியில் சீனாவை ஒட்டிய இந்திய எல்லை கோட்டு பகுதியில் 13 காட்டு எருதுகள் மற்றும் 4 கன்றுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கடந்த ஆகஸ்டு 31ந்தேதி அவற்றை இந்திய ராணுவத்தினர் பிடித்தனர்.
இதன்பின்னர் அவற்றை இந்திய ராணுவம் நல்லெண்ண அடிப்படையில் சீனாவிடம் இன்று ஒப்படைத்து உள்ளது. இதனை பெற்று கொண்ட சீன அதிகாரிகள் தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் 17 ஆயிரம் அடி உயர பீடபூமி பகுதியில் வழி தவறி சென்ற ஒரு பெண் உள்பட 3 சீனர்களை மீட்டு அவர்களுக்கு உணவு, உடை ஆகியவற்றை அளித்து அவர்களது இருப்பிடத்துக்கு இந்திய ராணுவம் வழியனுப்பி வைத்தது. இதுபோன்ற நல்லெண்ண அடிப்படையிலான விசயங்களை சீனாவுக்கு இந்தியா மேற்கொண்டு வருகிறது.
எனினும், கடந்த சில நாட்களுக்கு முன் அருணாசல பிரதேசத்தில் வசித்து வரும் பழங்குடி இளைஞர்கள் வேட்டைக்கு காட்டுக்கு சென்ற வழியில் அவர்களில் 5 பேரை சீன ராணுவம் சிறை பிடித்து சென்றது என தகவல் வெளியானது. அவர்களை தேடி அருணாசல பிரதேச போலீசார் குழு சென்றுள்ளது. எனினும், அவர்களை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அருணாசல பிரதேசத்தின் கிழக்கு காமெங் பகுதியில் சீனாவை ஒட்டிய இந்திய எல்லை கோட்டு பகுதியில் 13 காட்டு எருதுகள் மற்றும் 4 கன்றுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கடந்த ஆகஸ்டு 31ந்தேதி அவற்றை இந்திய ராணுவத்தினர் பிடித்தனர்.
இதன்பின்னர் அவற்றை இந்திய ராணுவம் நல்லெண்ண அடிப்படையில் சீனாவிடம் இன்று ஒப்படைத்து உள்ளது. இதனை பெற்று கொண்ட சீன அதிகாரிகள் தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் 17 ஆயிரம் அடி உயர பீடபூமி பகுதியில் வழி தவறி சென்ற ஒரு பெண் உள்பட 3 சீனர்களை மீட்டு அவர்களுக்கு உணவு, உடை ஆகியவற்றை அளித்து அவர்களது இருப்பிடத்துக்கு இந்திய ராணுவம் வழியனுப்பி வைத்தது. இதுபோன்ற நல்லெண்ண அடிப்படையிலான விசயங்களை சீனாவுக்கு இந்தியா மேற்கொண்டு வருகிறது.
எனினும், கடந்த சில நாட்களுக்கு முன் அருணாசல பிரதேசத்தில் வசித்து வரும் பழங்குடி இளைஞர்கள் வேட்டைக்கு காட்டுக்கு சென்ற வழியில் அவர்களில் 5 பேரை சீன ராணுவம் சிறை பிடித்து சென்றது என தகவல் வெளியானது. அவர்களை தேடி அருணாசல பிரதேச போலீசார் குழு சென்றுள்ளது. எனினும், அவர்களை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X